Wednesday 19 October 2016

கேஸ் மானியத்துக்கு ஆதார் எண்ணை இணைக்க நவம்பர் வரை காலக்கெடு

ஆதார் எண்ணை எல்பிஜி சிலிண்டர் நிறுவனத்திடம் வழங்கி நேரடி மானியம் பெறுவதற்கு நவம்பர் மாதம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், ஆதார் எண்ணை எல்பிஜி நிறுவனங்களிடம் சமர்ப்பித்தவர்களுக்கு, அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.
அவ்வாறு ஆதார் எண்ணை இணைக்கத் தவறிய வாடிக்கையாளர்களக்கு கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மானியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான மானியத் தொகை தனியாக வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள், எல்பிஜி சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திடம் வழங்கிவிட்டால், ஜூலை மாதம் அவர்களுக்கு சேர வேண்டிய மானியத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கான மானியமும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment