Friday 14 October 2016

முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய மேலும் 2 பேர் கோவையில் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அவதூறாகப் பேசியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகி புனிதா அளித்த புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த ரமேஷ், சுரேஷ் ஆகிய 2 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.
அவதூறு பரப்பியதாக ஏற்கெனவே 4 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் வங்கியில் பணிபுரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment