Friday 28 October 2016

ஏமாற்றத்தோடு விடைபெற்றது தென்மேற்கு பருவ மழை

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை முடிவடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது.
தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் முடிந்து விட்டது. வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 30ம் தேதி துவங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment