Monday 10 October 2016

பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த 20 மாதங்களில் 10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்

பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த 20 மாதங்களில் 10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தினமும் 1,500 மனுக்கள் வருவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குர்கானை சேர்ந்த அசீம் தக்யார் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் எத்தனை மனுக்கள் வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் மனுக்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு கேட்டு இருந்தார்.

அவரின் கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

இது குறித்து விவரம் வருமாறு:

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஜனவரி 31, 2016 ம் ஆண்டு வரை 10 லட்சம் மனுக்கள் வந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,500 மனுக்கள் பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.  மேலும் பிரதமர் அலுவலகத்துக்கென பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின்  எண்ணிக்கை, காய்கறிகளுக்கான செலவு விபரம், தொலைபேசி, இணையதள பயன்பாடு, பிரதமர் நரேந்திர மோடியின் பணி, அவரை சந்திக்க வருவோர் உள்ளிட்ட  விவரங்களை கேட்டு மனுக்கள் வந்துள்ளன.

No comments:

Post a Comment