Sunday 16 October 2016

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் வாட் வரி விதிப்பில் காணப்படும் வேறுபாட்டின் காரணமாக, விலை உயர்விலும் வேறுபாடு நிலவும். இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.45-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.55.38-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.72 உயர்ந்து, ரூ.65.96-க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலையும் ரூ.2.88 அதிகரித்து, ரூ.56.95 ஆக உள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை தற்போது 5-ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 5-ஆம் தேதி பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்த்தப்பட்டன. அதேபோல், டீசலின் விலையும் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment