Monday 17 October 2016

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் வழக்கம் போல் நடைபெறும் கலெக்டர் தகவல்

ருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள்

வருகிற 17–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் நடைபெறும். மேலும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment