Tuesday 7 June 2016

வாகன உரிமையாளர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்'


வாகன உரிமையாளர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை கண்காணிக்கும்விதமாக, குற்றச்செயல்களை தடுத்து சந்தேக நபர்களை  தணிக்கை செய்ய, வாகனப்பதிவு எண்கள் உண்மையானதா, உரிய வாகன ஆவணங்கள் உள்ளதா என தணிக்கை செய்யும் வகையில்  ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 44 இடங்களில்  ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் தொடர் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.
அதில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட சுமார் 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வந்து காவல் நிலையத்தில் சமர்ப்பித்தால் வாகனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் பதிவு எண்ணை மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் எழுதவும், முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment