Sunday 5 June 2016

நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு


 
நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்கள், முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிடம் சனிக்கிழமை வாழ்த்துப் பெற்றனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில், ஆர்.வைத்திலிங்கம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வெற்றிக்கான சான்றிதழ்களை 4 பேருக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான ஜமாலுதீன் வழங்கினார். வெற்றிச் சான்றிதழுடன், 4 பேரும் முதல்வர் ஜெயலலிதாவை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநிலங்களவையில் புதுச்சேரியுடன் சேர்த்து அதிமுகவின் பலம் 13-ஆக உள்ளது. மக்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment