Wednesday 29 June 2016

மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி கோரி முதல்வருக்கு மனு

மாற்றுத்திறனாளி மகளுக்கு மருத்துவப்படிப்பு பயில நிதி உதவு செய்யுமாறு மாணவியின் தாய் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
நீடாமங்கலம் வட்டம், முல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமியின் மனைவி ப.பூமயில். விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது 2-ஆவது மகள் கயல்விழி (17). இவர் பிளஸ் 2 தேர்வில் 904 மதிப்பெண் பெற்றுள்ளார்.  எலும்புத்தேய்மானம் தொடர்பான மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த கடந்த 20ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் தகுதியின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், மகளின் கல்விச் செலவுக்கு உதவிடுமாறு தாய் பூமயில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:  நான் கணவரை இழந்தவர். எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். 2 பெண் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள். அதில் எனது இளைய மகள் கயல்விழிக்கு (17) திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயில சேர்ந்துள்ளார். கணவரை இழந்த நான் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் விவசாயக் கூலி வேலை செய்து குறைந்த வருவாயில் எனது குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறேன். எனவே, எனது மகளின் மருத்துவப் படிப்புக்கான நிதி உதவியை வழங்கி உதவுமாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment