திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 2.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன்
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை,
ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 329 பேர் மனு அளித்தனர்.
அப்போது, மன்னார்குடி வட்டம், மகாதேவப்பட்டினம்
கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி வடகிழக்குப் பருவமழை காரணமாக 3.12.2015
அன்று வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்து இறந்தமையால் வாரிசுதாரரான சரோஜா
என்பவருக்கு பாரத பிரதமர் நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சத்துக்கான காசோலை
வழங்கப்பட்டது.
மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில்
மாற்றுத்திறனாளி குழந்தைகளான 5 பேருக்கு தலா ரூ. 6,000 மதிப்பிலான காது
கேட்கும் கருவியும், 2 பேருக்கு தலா ரூ.6,000 மதிப்பிலான மனவளர்ச்சி
குன்றியோருக்கான உதவி கருவிகளும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில்
ஒருவருக்கு ரூ.5,000 மதிப்பிலான மூன்று சக்கர வண்டியும், ஒருவருக்கு
ரூ.1,500 மதிப்பிலான ஊன்றுகோல், காது கேட்கும் கருவி, ஒருவருக்கு ரூ.500
மதிப்பிலான ஊன்றுகோல் கருவி என மொத்தம் ரூ. 2.52 லட்சம் மதிப்பில்
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ்,
தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) விஜயலெட்சுமி உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
No comments:
Post a Comment