திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், முழங்குடி
ஊராட்சி பண்டாரவடை தெருவைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் - ரேவதி தம்பதி.
இவர்களது 5 மாத குழந்தை மணிகண்டன். குழந்தைக்கு இருதயத்தில் துளை
இருப்பதாகவும், கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி மருத்துவ மேல்
சிகிச்சைக்கு பரிந்துரைக்கக்கோரி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில்
திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு
அளித்தனர்.
மனு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குழந்தை
மணிகண்டனுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை
சிகிச்சை செய்ய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ.
மீனாட்சிசுந்தரம் தலைமையில் மருத்துவர்கள் குழு முடிவெடுத்தது.
குழந்தைக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் கண் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை ஆட்சியர் எம். மதிவாணன்
திங்கள்கிழமை பார்வையிட்டார்.
அப்போது, அவருடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment