திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 11
ஆம் தேதி பொது விநியோகத் திட்டத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது
என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும்
வகையில், திருவாரூர் வட்டம் புலிவலம்-2 கிராமத்தில் திருவாரூர்
கோட்டாட்சியர் தலைமையில், நன்னிலம் வட்டம் மாப்பிள்ளைகுப்பம் கிராமத்தில்
திருவாரூர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் தலைமையில்.
குடவாசல் வட்டம் மேலஉத்திரங்குடி கிராமத்தில் தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில், வலங்கைமான்
வட்டம் தொழுவூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்
திருவாரூர் தலைமையில், நீடாமங்கலம் வட்டம் பெரம்பூர் கிராமத்தில் மாவட்ட
வழங்கல் அலுவலர் தலைமையில், மன்னார்குடி வட்டம் மூவாநல்லூர் கிராமத்தில்
மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டம் கச்சனம்
கிராமத்தில் மன்னார்குடி கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் தலைமையில் பொது
விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் பொது விநியோகத்திட்ட
அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர்
சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம்
குறித்து கோரிக்கை மனுவை ஜூன் 11 ஆம் தேதி அந்தந்தப் பகுதியில் காலை 10
மணிக்கு நடைபெறவுள்ள குறைதீர் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம்.
No comments:
Post a Comment