Thursday 23 June 2016

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது.
 திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவர்கள் படிக்க இந்திய மருத்துவக் கழகத்தின் அங்கீகாரம் 2020-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது.  அதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் படியும், 85 இடங்கள் மாநில கலந்தாய்வின் மூலமும் நிரப்பப்படுகிறது.
 சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் அவர்களது விருப்பப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது.
 இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:
 கலந்தாய்வு நடைபெற்றதில் முதல் கட்டமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் திருச்சியை சேர்ந்த சரவணன் மகன் மணிசங்கர், நீடாமங்கலம் முல்லைவாசலைச் சேர்ந்த  பக்கிரிசாமி மகள் கயல்விழி, வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வில்வநாதன் மகள் பிரியங்கா ஆகிய மூன்று மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மூவரும் மாற்றுத் திறனாளிகள். கல்லூரியில் அனைவரும் சேர்ந்த பிறகு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment