திருவாரூரில் ஜூன் 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி காலை 10.30
மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில்
நடைபெறவுள்ளது.
இதில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment