Wednesday 1 June 2016

உள்ளாட்சித் தேர்தல்: இனசுழற்சி ஆலோசனைக் கூட்டம்


திருவாரூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2016 இன சுழற்சி, இடஒதுக்கீடு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உதவி இயக்குநாó நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இனசுழற்சி, இடஒதுக்கீடு மேற்கொள்வது குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்கி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 2016 சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அதிலுள்ள வாக்காளர்களை வார்டு வாரியாக, இனவாரியாக சரிபார்த்து நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றார் மதிவாணன்.
இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநா ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment