Sunday 13 November 2016

டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறையில்லை: சென்னை மண்டல ரிசர்வ் வங்கி

வரும் டிசம்பர் மாதம் 30ம்  தேதி வரை வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும் என்று சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக, மக்களின் வசதிக்காக அனைத்து வங்கிகளும் விடுமுறை இன்றி இயங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 30ம் தேதி வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்படும் என்று சென்னை ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் சதகத்துல்லா தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்கள் சிரமமின்றி, வங்கிகளுக்கு வந்து பணத்தை மாற்றிக் கொள்ள வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment