Sunday 26 February 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் எடுப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு ஜெய்சிங் தலைமை தாங்கினார். இதில் நவீன், ராஜா, சிலைடன், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment