Tuesday 21 February 2017

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருவாரூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வற்றி கிடக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது பனிபொழிவு அதிகமாக உள்ளது. மார்கழி மாதம் பெய்ய வேண்டிய பனி தை மாதத்தை கடந்து மாசி மாதம் வரை நீடித்து வருகிறது. இரவு குளிருக்கு நிகராக, பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வருகிறது. இதனால் திருவாரூரில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கத்தை தணிக்க தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருவாரூர் கமலாலயம் தென்கரையில் உள்ள தர்பூசணி வியாபாரி கூறுகையில், இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்குள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தாகத்தை தணிக்கின்ற வகையில் திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பழங்களை வாங்கி செல்கின்றனர் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment