Wednesday 15 February 2017

மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவாரூர் அருகே உள்ள பழவனக்குடி ஊராட்சி கொச்சக்குடி கிராமத்தில் உரிய அனுமதியின்றி அரசு நிலங்கள், விளைநிலங்கள் மற்றும் ஆற்றின் கரைகளிலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இந்த மணல் திருட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சுக்கான் ஆற்றின் கரை உடையும் அபாயநிலையில் உள்ளது. மேலும் விளைநிலங்களில் மண் எடுக்கப்படுவதால் ஆபத்தான சூழ்நிலை உருவானது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று சொச்சக்குடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அதனை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மணல் திருட்டுக்கு எதிராக கிராமமக்கள் நடத்திய போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment