Monday 6 February 2017

திருவாரூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தட்டம்மை நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக தட்டம்மை தடுப்பூசி முகாம்  (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1,256 முகாம்கள் பள்ளிகளிலும், 867 முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து குழந்தைகள் பயன் பெறுவார்கள். இந்த தடுப்பூசி, தட்டம்மை நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.

4 பேர் கொண்ட குழு

ஒவ்வொரு முகாமிலும் கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் டாக்டர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை 30 நிமிடம் முகாமில் இருக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அசோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment