Monday 13 February 2017

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 960 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தட்டம்மை தடுப்பூசி

திருவாரூர்் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது. மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் 2,123 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருவாரூர்் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்களில் 9 மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் ஏற்கெனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு முறை தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

வதந்தி

இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரு நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம். மாவட்டத்தில் இதுவரை ஊசி போடப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித சிறு பாதிப்பும்கூட ஏற்படவில்லை.

எனவே, வதந்திகளை நம்பாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 960 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி சம்பந்தமான ஆலோசனை பெற 104 என்ற தொலைபேசி் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment