Wednesday 12 February 2014

Kodikkalpalayam - தலைக்கட்டு சோறு

          நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை  ஜமாஅத் ஒவ்வொரு ஆண்டும் ரபியுல் ஆகிர் மாதம் பிறை 11 அன்று இரவு வருடாந்திர மகாஜன சபை அதாவது பொதுமக்கள் சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம் .

       இதில் கடந்த ஆண்டு ஜமாஅத் வரவு செலவு அறிக்கை ,தணிக்கையாளர் அறிக்கை ,ஹாஜி தி.இப்ரம்ஷா ராவுத்தர் எஸ்டேட் அறிக்கை ,52பணப்பகுதி ,மத்லபுல் கைராத் கல்வி குழுமம் ,பைத்துல் மால்
என அனைத்து அமைப்புகளின் கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க படும் . இவைகள் எல்லாம் காலம் காலமாக நடைபெற்று வரும் பழக்கம் .

 
     பின்னர் பஜ்ர் தொழுகைக்கு பிறகு தலைக்கட்டு சோறு   வழக்கப்படும் .இதில் நமதூர் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவருகளுக்கு நெய் சோறு வழக்கப்படும் .மேலும் திருமணமானவர்களுக்கு முழு தலைக்கட்டும்,ஆகாதவர்களுக்கு அரை தலைக்கட்டும்  வழக்கப்படும் .

 
நம் முன்னோர்கள் கடைபிடித்த நடைமுறையில் இன்றும் நமதூரில் மட்டுமே
 தலைக்கட்டு சோறு  சிறப்புடன் நடக்கிறது .வெளியூரில் இருக்கும் நமது ஜமாஅத்தார்கள் சோறு வாங்க வருகிறார்கள் .

அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சோறு வாங்கி செல்லுகிறார்கள் .
 
 

 

No comments:

Post a Comment