Thursday 2 January 2014

திருவாரூரில் பொய் வழக்கை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்



தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கை போட்ட இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 1.1.2014 மாலை 4 மணி அளவில் திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் ஹலிலூர் ரஹ்மான் தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் யாகத் அலி, மமக மாவட்ட செயலாளர் சீனி முஹம்மது, மாவட்ட பொருளார் கமாலூதீன் முன்னிலையில் நடைபெற்றது. மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வத்கான், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜீதீன் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முன்னால் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 300க்கும் அதிகமான தமுமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment