Monday 12 February 2018

சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன் நின்று செல்பி எடுத்து கொண்ட அதிமுக எம்.பி,- எம்எல்ஏக்கள்



முன்னாள முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை  விடுத்தனர். இதை ஏற்று ஜெயலலிதா உருவப்படம் சட்டசபை அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சட்டசபை அரங்கில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக  சட்ட சபை நுழைவு வாயில் மற்றும் பேரவை மண்டபம் மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது.

சட்டசபையில் இன்று சபாநாயகர் இருக்கை இருந்த இடத்தில் 6 இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நினைவு பரிசு வழங்கினார். விழா 9.30 மணிக்கு தொடங்கியது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். ஜெய லலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசிய உரை சட்டசபையில் ஒலிபரப்பப்பட்டது. 9.53 மணிக்கு நிகழ்ச்சி நிறை வடைந்தது.
படத்திறப்பு நிகழ்ச்சியில்  அ.தி.மு.க.  எம்.பி.க்கள், முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட செய லாளர்கள், அரசு வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிர தான எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் அமரும் இருக்கையில் அவர்கள் அமர்ந்தனர். துரைமுருகன் இருக்கையில் மதுசூதனன் அமர்ந்து இருந்தார். பி.எச்.பாண்டி யன், பொன்னையன், கே.பி. முனுசாமி, தமிழ்மகன் உசேன், புதுவை அன்பழகன், பாலகங்கா, வைத்திலிங்கம், வேணு கோபால் கலந்து கொண்டனர்.

யாருக்கும் குறிப்பிட்ட இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. விருப்பப்பட்ட இடங்களில் அனைவரும் அமர்ந்து இருந்தனர். விழா முடிந்ததும் ஜெயலலிதா படம் முன்பு நின்று எம்.எல். ஏ.க்கள் “செல்பி”எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment