Friday 5 November 2021

கொடிக்கால்பாளையம் நாட்டாண்மை தலைவரானார்




நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் பைலா சட்டப்படி மூன்று ஆண்டுகள் நிர்வாகம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1966 ஆண்டு பைலாவில் கடந்த 2010 ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் நாட்டாண்மை முறை இருந்ததை தலைவர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதல் தலைவராக ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் முலமாக மஹாஜன சபை கூட்டத்தில் புதுமனைத்தெரு A.M.ரபீயூதீன் அவர்களிடம் கடைசி நாட்டாண்மை நடுத்தெரு செ.மு.மு.கலிலூர் ரஹ்மான் 2012 மார்ச் 4 அன்று பொறுப்புகளை ஒப்படைத்தார். இரண்டாவது தலைவராக வக்ப்வாரிய தேர்தல் அதிகாரி நடத்திய தேர்தல் மூலமாக மஹாஜன சபை கூட்டத்தில் ஜெயம் தெரு M.M.ஜலாலுதீன் அவர்களிடம் 2015 மார்ச் 22 அன்று பொறுப்புகளை ஓப்படைத்தார் விடை பெறும் தலைவர் ரபீயூதீன். மூன்றாவது தலைவர் தேர்தல் நீதிமன்றம் வழக்கு தடை காரணமாக சுமார் 8 மாதங்கள் கழிந்து 2018 அக்டோபர் 21 அன்று மாலை நடந்த ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் மூலமாக தேர்தல் மஹாஜன சபை கூட்டத்தில் 423 ஜமாஅத் அங்கத்தினர்கள் வாக்கு பதிவு செய்து மேலத்தெரு வி.எஸ்.என்.முஹம்மது ஆதம் அவர்கள் அதிகாலை 2:55 மணிக்கு பொறுப்புகளை ஜலாலுதீன் அவர்களிடம் இருந்து பெற்று கொண்டார். தற்போது நான்காவது தலைவர் தேர்தல் நடைபெற வேண்டும் .ஆனால் மஹாஜன சபை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி நாள் அறிவிப்பு செய்யப்பட்டது.ஆனால் தொடர்ந்து வெளிவராமல் இருந்தது.ஆனால் தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோளுக்கு இணக்க வக்ப் வாரியத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியாகவும் அதற்கு இப்போது எதுவும் செய்யவேண்டாம் விரைவில் அறிவிப்போம் என்று வக்ப் வாரியம் கடிதம் அனுப்பியதாக ஜூம்மாவில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 21.10.2021 அன்றுடன் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் நிறைவேடைந்தது. ஆனால் தலைவர் முஹம்மது ஆதம் அவர்கள் பிரதிநிதிகள் சபையை கூட்டி செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் மனு வந்து இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அண்மையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நமதூர் சகோதரர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இதனால் ஜமாஅத் அங்கத்தினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜமாஅத் துணைத்தலைவர் ப.மு.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் அவசர பொதுசபை கூட்டம் கடந்த 23.10.2021 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கூடி இடைக்கால நிர்வாக ஐவர் குழு தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சுமார் 150 பேர்கள் கலந்து கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவு செய்தார்கள். பின்னர் மறுநாள் 24.10.2021 ஞாயிறு அன்று முன்னாள் தலைவர் முஹம்மது ஆதம் அவர்களின் சகோதரர் மகன் திருமணம் ஐவர் குழு நடந்த எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளியில் கலந்து கொள்ளவில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது.மற்ற திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகள் ஐவர் குழு நடத்த தொடங்கி விட்டது. காலதாமதம் இல்லாமல் விரைவில் புதிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்கும் நிலையை சமபந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தி தர வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன் 31.10.2021

No comments:

Post a Comment