Saturday 17 March 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல்பற்றிய ஒருவிளக்கம்

 நமது  முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018ல் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய தெரு பிரதிநிதிகள் தேர்தலில் புதுமனைத்தெரு தவிர 20 பேர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இடையில் மேலத்தெரு பிரதிநிதி யாக வெற்றி பெற்ற முஹம்மது ஆதம் தற்போதைய தலைவர் ஜலாலுதீன் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றதால் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறவில்லை.
 வரும் மார்ச் 23ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை க்கு வரும்போது ஒருவேலை தடையாணையை விலக்கி கொண்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க தடை இருக்காது.
 எனவே அதுவரை தற்போது உள்ள நிர்வாகிகள் மற்றும் தெரு பிரதிநிதிகள் பொறுப்பில் இருப்பார்கள்.

No comments:

Post a Comment