Monday 30 January 2017

நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க இதுவரை இருந்த உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது. பிப்., 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.பழைய, 500 மற்றும், 1000 ரூபாயை வாபஸ் பெறுவதாக, நவ., 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு, வங்கி கணக்குகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.,களில் முதலில் ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் இது, 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஜன., 1 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடித்தது.

இந்த சூழ்நிலையில், பிப்., 1 முதல் ஏ.டி.எம்.,களில் தற்போது உள்ள உச்சவரம்பான, 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவு நீக்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கான உச்சவரம்பு கட்டுப்பாட்டை அவர்களை விதித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment