Saturday 28 January 2017

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மழை தொடரும்

கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்று மன்னார் வளைகுடா முதல் வட தமிழக கடற்கரை வரை நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது கன்னியாகுமரி அருகே நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு திசையில் நகர்வதால், அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment