Saturday 14 January 2017

திருவாரூர் மாவட்டத்தில் மது விற்ற 6 பேர் கைது


திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது மன்னார்குடி சாலையில் திருத்துறைப்பூண்டி ஆட்டூரை சேர்ந்த சின்னப்பன் (வயது 50), குடவாசல் திருவிடச்சேரியில் அதே பகுதியை சேர்ந்த சேகர் (55), நடப்பூரில் திருவாரூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (27), சம்பத் (32), குடவாசலை சேர்ந்த தாமஸ் (37) ஆகிய 5 பேர் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருத்துறைப்பூண்டி மேலமருதூரில் சாராயம் விற்பனை செய்த வேதாரண்யத்தை சேர்ந்த காளிதாஸ் (30) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment