Thursday 20 September 2018

கொடிக்கால்பாளையத்தில் அமைச்சர் காமராஜ்






*கொடிக்கால் பாளையம் பொதுமக்களின் நலன்கருதி சில கோரிக்கைளை முன்வைத்து ஜமாத் பொதுமக்கள் சார்பாக 16/09/2018 அன்று உணவு துறை அமைச்சர்  அவர்களிடம்  கொடுக்கப்பட்ட மனு சம்மந்தமாக இன்று உணவு துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள், திருவாரூர் நகராட்சி ஆணையர் ஆகியோர் கொடிக்கால்பாளையம் வருகை தந்து நாம் கோரிக்கையில் குறிப்பிட்ட இடங்களை கள ஆய்வு செய்தனர் விரைவில் இந்த மூன்று கோரிக்கைகளையும்  நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர் இன்நிகழ்வில்  M.முஜிபுர்ரஹ்மான், தமுமுக மமக முன்னால் மாவட்ட தலைவர், M.ஜாஹிர்ஹுசைன் இந்திய தேசிய காங்கிரசு  முன்னால் நகர மன்ற உறுப்பினர். கொடிக்கால்பாளையம் ஜமாத் முத்தவல்லி ப.மு. ஹபீபுல்லா , செயலாளர் நஜ்புதீன் , ஆடிட்டர் அப்துல் ரஜாக் , தமுமுக மமக வார்டு நிர்வாகிகள் அஷ்ரஃப், ஃபர்வேஸ்,ஃபாமின், கமருல்ஜமான், ரொஸ்,  தமுமுக நகர செயலாளர் A.பாஷா மற்றும் ஊர் ஜமாத் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.*

No comments:

Post a Comment