Sunday 23 September 2018

திருவாரூரில் போட்டி மு.க.அழகிரி தகவல்



திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மு.க.அழகிரி பேசியதாவது,
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது பற்றி பார்க்கலாம். என்னுடைய விசுவாசிகளிடம் கேட்ட பிறகு திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். நான் தேர்தலில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. ரஜினிக்கு பின்னணியில் நான் இல்லை. பாஜக என்னை இயக்கவில்லை. தமிழக அரசு எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஆதரவு குறித்து பார்க்கலாம். எனக்கு எல்லோரும் ஆதரவு அளிப்பார்கள்.
கருணாநிதி கொள்கைகளை நான் என்றும் பின்பற்றுவேன். சென்னையில் நடைபெற்றது கருணாநிதி நினைவுப் பேரணி. கட்சியில் இணைத்துக்கொண்டால் இணைந்துகொள்வேன். திமுக-வுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றார். 

No comments:

Post a Comment