Sunday 29 October 2017

பள்ளிவாசல், தர்காக்களில் பணிபுரிவோர் உலமா அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பள்ளிவாசல், தர்கா, மதரசாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வாரியத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச் சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

மேலும் உறுப்பினர்களின் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும். உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு 1.11.2017 அன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் கலந்துகொண்டு, உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

No comments:

Post a Comment