Sunday 1 October 2017

வாழ்வு தரும் இதயம் பற்றி இதயப்பூர்வமாக சிந்தியுங்கள்

ரோக்கியத்திற்கு மைய மாய், விளங்குவது இதயம் தான். எனவேதான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது விலை மதிப்பற்றது, மிக மிக முக்கியமானது. நன்கு, தங்கு தடையின்றி இயங்கிக் கொண்டு, சீராக இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டு மெளனமாக செயல்படும் இதயத்திற்கும், அதன் பராமரிப்பிற்கும் சரியான கவனமும், ஆய்வுகளும், சிறந்த முயற்சிகளும் மிக அவசியம்.

இதய ஆரோக்கியம் என்பதைப் பற்றி ஓரளவு ஆழமாகத் தெரிந்து கொண்டால்தான், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் அவசியம் புரியும் அதற்கான முயற்சிகளையும் எடுக்க முடியும் வருமுன்னர் காப்பது என்பது மிக முக்கியம் ; சொல்லப் போனால் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட முக்கியமானது. நியாயமான, அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும், ”நமது இதயத்தை தூண்கள் போல் தாங்குபவை எவை? எதனால் இதயம் வலுவிழக்கிறது? இதயத்தின் எதிரிகளை எப்படி அறிவது? எப்படித் தடுப்பது? இவற்றையெல்லாம் சரியாக செய்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?’ என்பது போன்ற பல கேள்விகள் எழுவது நிச்சயம்.

ஆரோக்கியமான இதயத்தைத் தாங்கும் முதல் அடிப்படைத் தூண், சரியான ஆரோக்கியமான உணவு தான். இதய ஆரோக்கியத்திற்கான சரியான உணவினால் என்ன கிடைக்கும்? உணவு என்பது காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அதன் பல்வேறு முகங்களும் காலத்திற்கேற்ப தேவைகளுக்கேற்ப மாறி வருகின்றன. ஆயினும் எப்போதும் மாறாமல் இருப்பது ஒன்றுதான். சரிவிகித உணவு (பேலன்ஸ்டு டயட்) என்பது எப்போதும் சிறந்தது. அங்கங்கே அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு எவ்விதமான சத்தையும் ஒரேயடியாகக் குறைத்துவிடாமல் தயாரிக்கப்படும் உணவே என்றும் சிறந்தது. பாதுகாப்பானது. சத்துணவு ஆலோசகர்கள் இதற்கு உதவலாம். அடுத்த தூண் சரியான உடற்பயிற்சி. உடலுக்கும் 

No comments:

Post a Comment