Wednesday 2 December 2015

இருள் சூழ்ந்த நிலையில் சென்னை


தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் கனமழை கொட்டி வருகின்றது. இந்நிலையில் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை முழுவதும் இருள் சூழ்ந்து நிலையில், புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment