Friday 18 December 2015

மலேசிய நோயாளிக்கு ஸ்டெம்செல் தானம் செய்யும் சீனர்


சீனாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ரத்த சம்பந்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு ஹீமோபொய்டிக் என்ற ஸ்டெம்செல்லை (எச்எஸ்சி) தானமாக அளித்துள்ளார்.
லு (22) என்ற சீனர், ஸ்டெம்செல் தானம் அளிப்பதாக சீனா மார்ரோ டோனர் திட்டத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், இவரது ஹியூமன் லிகோசைட் ஆன்டிஜென் (எச்எல்ஏ) மலேசியாவைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு பொருந்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து லு கூறுகையில், இதுபற்றி தெரிந்ததும் நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஆனால், நிச்சயம் இந்த ஸ்டெம்செல் தானத்தை செய்தாக வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.
ஸ்டெம் செல் பொருந்துவது மிகவும் அரிதான செயலாகும். எப்போதாவது அது 0.25 சதவீதம் முதல்  0.01 சதவீதம் வரையே பொருந்தும்.
நான் செய்த ஆய்வுகளின்படி, ஸ்டெம்செல் தானம் செய்வதால், தானம் அளிப்பவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்று தெரிய வந்தது. மேலும், ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
லுவின் உடலில் இருந்து சுமார் 420 மில்லி லிட்டர் ஸ்டெம்செல் பிரிக்கப்பட்டு அவை மலேசியா கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு ஊசி மூலம் ஏற்றப்படவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment