Wednesday 30 December 2015

திருவாரூரில் காலாவதியான குளிர்பானம் பறிமுதல்


திருவாரூர் கடைவீதியில் காலாவதியான குளிர் பானங்கள், ரொட்டிகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆட்சியர் மதிவாணன் அறிவுறுத்தலின் பேரில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை, மருந்து நிர்வாகத் துறையினர் திருவாரூர் நகர் பகுதிக்கு உள்பட்ட விளமல், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, காலாவதியான உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர் பானங்கள், ரொட்டிகளை பறிமுதல் செய்தனர். உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment