Thursday 31 December 2015

விழிப்புணர்வு பதிவு



திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையத்தில் சமீப காலமாக சலவை தூள் விற்ப்பனை, போர்வை என பல்வேறு பொருட்கள் விற்பனை, என்ற பெயரில் ஊரில் வெளிமாநிலத்தை சார்ந்தவர்களும் தமிழகத்தை சார்ந்தவர்களும் வருகின்றன.

அதே போல் இன்று நமதூரில் வட மாநிலத்தை சார்ந்தவர்கள் ஒரு வீட்டின் கொள்ளை பகுதியில் இருவர் நின்று கொண்டு இருந்தன அவர்களை பிடிக்க சென்ற போது ஒருவர் தப்பி சென்றார் ஒருவரை மட்டும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பலரும்  வருகின்றன அவர்கள் எதற்காக வருகிறார்கள்? எந்த நோக்கத்தில் வருகிறார்கள்? என பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. எனவே பொதுமக்கள் யார் இது போன்று விற்பனைக்கு வருபவர்களை உங்கள் கம்பெனி I.D உள்ளதா? உங்களுடைய I.D தாருங்கள் என கேளுங்கள், பொருட்கள் விற்ப்பனைக்கு என்று அதிகமாக வருவார்கள் அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்காதீர்கள் முக்கியமாக தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறக்காதீகள். எனவே விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இதுபோன்று யாரேனும் வந்தால் அருகில் உள்ளவர்களை அழைங்கள் அல்லது கீழ் காணும் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இதை அதிகமாக நமதூரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வையுங்கள் குறிப்பாக பெண்களுக்கு இந்த விழிப்புணர்வு பதிவை எடுத்து சொல்லுங்கள்.

9750505098, 9790131486, 9942847537

இவண்
தமுமுக,
கொடிக்கால்பாளையம்,
திருவாரூர் நகரம்.

No comments:

Post a Comment