Monday 21 December 2015

தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
 வடகிழக்கு பருவமழை தென் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகின்றது. 
 இந்நிலையில் குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கைப் பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, லட்சத்தீவு அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.
 இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை முதல் இரு தினங்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment