Tuesday 15 December 2015

திருவாரூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவு நீர் தொற்றுநோய் பரவும் அபாயம்


T







பாதாள சாக்கடையில் இருந்து வெளியான கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கழிவு நீர்

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தற்போது மழை நின்று தண்ணீர் வடிய தொடங்கி விட்டது. இந்த நிலையில் திருவாரூர் விவேகானந்தர் நகர், வாசன் நகர் உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை உந்து நிலையம் சரிவர செயல்படாததால் கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவேகானந்தர் நகர், வாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

துர்நாற்றம்

பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதாள சாக்கடை பழுதுகளை விரைவாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர். 

No comments:

Post a Comment