Sunday 13 December 2015

மூணாறு தலைப்பில் தண்ணீர் திறப்பு


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள  மூணாறு தலைப்பிலிருந்து பாசனத்துக்கு சீரான வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு உள்ளது. இதனை கோரையாறு தலைப்பு என்றும் கூறுவர். கல்லணையிலிருந்து பெரியவெண்ணாறு வழியாக இந்த மூணாறு தலைப்புக்கு ஆற்றுநீர் வருகிறது. மூணாறு தலைப்பிலிருந்து கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு ஆகிய ஆறுகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் பிரித்து விடப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்ததால் மேட்டூர் அணை மூடப்பட்டு கல்லணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்படாததால், பெரிய வெண்ணாற்றில் மழைநீர் மட்டுமே வந்தடைகிறது. இந்த மழைநீர் மூணாறு தலைப்புக்கு தற்போது 321 கனஅடி மட்டுமே வருகிறது. இந்த நீரானது கோரையாற்றில் திறந்துவிடப்படுகிறது.
மூணாறு தலைப்புக்கு வரும் மழைநீரால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment