Wednesday 29 November 2017

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூரில் கடந்த 26-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது.

நேற்று காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். சாலையில் இருந்த பள்ளங்களில் தேங்கிய மழை நீர் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல மணிநேரம் பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மன்னார்குடி-14, பாண்டவையாறு தலைப்பு-14, நன்னிலம்-13, வலங்கைமான்-9, முத்துப்பேட்டை-8, குடவாசல்-6, நீடாமங்கலம்-5, திருத்துறைப்பூண்டி-3. 

No comments:

Post a Comment