Thursday 2 November 2017

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு மழையால் விடுமுறை: ஆட்சியர்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்றும் கன மழை பெய்தது.

கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.4ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.  பள்ளி மாணவர்களின் சிரமம் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment