Thursday 29 June 2017

திருவாரூரில் பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி திருவாரூரில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவரை, ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். திருவாரூர் கொடிக்கால்பாளையம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவாரூர் விஜயபுரம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நீடாமங்கலம் கடைத்தெரு, பழைய நீடாமங்கலம், கோவில்வெண்ணி, ஆலங்குடி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடி

இதேபோல மன்னார்குடி பெரிய கடைவீதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மன்னார்குடி கீழராஜவீதி சின்னக்கடை தெரு பள்ளிவாசல், பெரிய கடை வீதி பெரிய பள்ளி, வக்து பள்ளி, நெடுவாக்கோட்டை, அசேஷம் ஆகிய 5 பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்து கொண்டனர்.

No comments:

Post a Comment