Friday 12 October 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2018 -மஹாஜன சபை கூட்டம் அழைப்பு




திருவாரூர் - கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2018 அனைத்து தெரு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பொது சபை கூட்டம் கூடி அங்கிகாரம் வழங்கி நிர்வாக சபையை தேர்வு செய்து புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது ஜமாஅத் சட்டவிதி.

இதன்படி பொது சபை கூட்டம் இன்ஷாஅல்லாஹ்   வரும் ஹிஜ்ரி 1440 ம் ஸபர் மாதம் 4 (14/10/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மஃஸூம் மஹாலில் தலைவர் ஜலாலுதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற உள்ளது.

இதில் நடந்து முடிந்த தெரு பிரதிநிதிகள் தேர்தல் அங்கிகாரம் வழங்கினால் நிர்வாக சபை தேர்தல் நடைப்பெறும்.
நீண்ட நாளுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு உடன் நடைபெறும் இக்கூட்டத்தில்
 நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் மாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment