Monday 15 May 2017

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலக கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியது

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. ரான்சம்வேர் வைரஸ் இந்திய நெட்வோர்க்கை தாக்கியதாக தகவல்கள் எதுவும் இதுவரையில் வரவில்லை என அரசின் சைபர் க்ரைம் பாதுகாப்பு பிரிவு கூறிஉள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கி உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாரியோடே பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் திறந்து, கம்ப்யூட்டர்களை ஆன் செய்தனர். அப்போது அவர்களுடைய 4 கம்ப்யூட்டர்களும் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் (ரூ.19 ஆயிரத்து மேல்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாகவும், இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று பஞ்சாயத்து அலுவலக அதிகாரி சந்தோஷ் கூறிஉள்ளார். 

இதுபோன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொன்னி அருகே உள்ள அருவாபுலம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கம்ப்யூட்டர்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தில் பேப்பர் பைல்களை குறைக்க முக்கிய ஆவணங்கள் கணினிகளில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. 

ஹேக்கிங்கிற்கு உள்ளாகி உள்ள கம்ப்யூட்டர்களை எப்படி மீட்பது என ஐடி நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

No comments:

Post a Comment