Wednesday 24 May 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 கிராமமக்கள் போராட்டம்

பொதுமக்களை பாதிக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசுப்படுவதை தடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அடியக்கமங்கலம் உள்பட 6 கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அடியக்கமங்கலம் பட்டகால் தெருவில் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல்ஜலில், ராஜபாண்டியன், ஹாஜாபகுருதீன், மாரிமுத்து, ஹாஜாமைதீன் ஆகியோர் தலைமை தாங்கினர். அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், சேமங்கலம், கருப்பூர், அலிவலம், கள்ளிக்குடி ஆகிய 6 கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

No comments:

Post a Comment