Wednesday 17 May 2017

போக்குவரத்து தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்: 50 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை


13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அரசே ஈடு செய்ய வேண்டும் என்கிற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 இடங்களில் உள்ள பணிமனைகளில் மொத்தம் 245 நகர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவாரூர்-33, மன்னார்குடி-30, திருத்துறைப்பூண்டி-44, நன்னிலம்-18 என மொத்தம் 125 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 50 சதவீதம் அரசுபஸ் ஓடவில்லை.

இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் ரெயில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணிகள் சென்றனர்.

No comments:

Post a Comment