Saturday 13 May 2017

பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 88.77 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள்– 66, ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகள்–3, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள்–1, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள்–12, பகுதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள்–2, சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள்–3, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்–23 என மொத்தம் 110 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 566 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 134 மாணவர்கள், 7 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 930 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.77 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.59 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாநில அளவில் பிளஸ்–2 தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் 31–வது இடத்தில் இருந்த திருவாரூர் மாவட்டம் தற்போது 25–வது இடத்தை பிடித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேற்கண்ட தகவலை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் கூறினார்.

No comments:

Post a Comment