Friday, 5 December 2025

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் முக்கிய அறிவிப்பு

05.12.2025


#கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஜனாப் மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உள்ளது.


இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இதில் விவாதிக்கும் பொருள் பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் உள்ளது.

Thursday, 4 December 2025

மௌத் அறிவிப்பு


 

#கொடிக்கால்பாளையம் நடுக்கொத்த தெரு, பட்டறை வீட்டு, மர்ஹும் P.முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மகனாரும், முஹம்மது பந்தூர் T.S.ஹபிபுல்லா அவர்களின் மருமகனும், முஹம்மது பந்தூர் சுகைல் முஹம்மது அவர்களின் மாமனாரும், பாக்கம் கோட்டூர் M.அப்துல் கபூர், கொடிக்கால்பாளையம், S.முஹம்மது உசேன், கூத்தூர் ஜலால் அஹமது ஆகியோரின் மைத்துணரும், J.முஹம்மது யூசுப் இவர்களின் தகப்பனாரும் ஆகிய Engineer *P.M.ஜாகிர் உசேன்* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

அன்னாரது ஜனாஸா நாளை 05/12/2025, வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு கொடிக்கால்பாளையம் ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நாகூர் ஹந்தூரி விழா கொடி இறக்கம் நிகழ்ச்சி


 

Wednesday, 3 December 2025

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு



03.12.2025


கொடிக்கால் பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது தையூப் அவர்களின் சம்மந்தியும் கூத்தூர் கொய்யமரத்தார் வீட்டு மர்ஹூம் அப்துல் அஜிஸ் அவர்களின் மனைவியும் முஹம்மது நவ்சாத்  , முஹம்மது இஸ்மாயில் இவர்களின் தாயாருமான ஷரீஹத்து நாச்சியா அவர்கள் அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 2 December 2025

மத்ரஸா மத்லபுல் ஹைராத் மாலை மத்ரஸாவாக மாற்றம்

110 ஆண்டுக்கால மத்ரஸா மத்லபுல் ஹைராத் நடத்தி வரும் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் காலை மக்தப் மத்ரஸா இன்ஷாஅல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1447 ஜமாத்துல் அகிர் பிறை 10  (01.12.2025) திங்கட்கிழமை முதல் அஸர் தொழுகைக்கு பிறகு மாலை மத்ரஸாவாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.











 

டிட்வா புயல் மழை வலுவிழந்து

Sunday, 30 November 2025

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு



29.11.2025


கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு K.V.S.அப்துல் காதர் அவர்களின் மைத்துனர் மனைவியும், நடுத்தெரு போஸ்ட் துரை என்கிற அ.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும், அடியக்கமங்கலம் ப.மு.வீட்டு மர்ஹூம் கியாசுதீன் அவர்களின் மனைவியும் K. ரூக்னுதீன் K.சஃபியுதீன் இவர்களின் தாயாருமான சேச்சி என்கிற ஹாஜியா வஜீஹா நாச்சியா அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா  30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 28 November 2025

டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலி திருவாரூர் பள்ளி அரைநாள் விடுமுறை

மௌத் அறிவிப்பு

 




நமதூர் வடக்கு தெரு மார்ஹும் A.அப்துல் காதர் அவர்களின் மகனாரும் V.M.கமாலுதீன் அவர்களின் சம்பந்தரும் A.ஹாஜா அலாவுதீன், A.அமீர் அலி, A. நிஜாமுதீன் ஆகியோரின் மச்சானும், K.ரஹ்மத்துல்லா, காரியமங்கலம் R. முகமது இப்ராஹிம் ஆகியோரின் மாமனாரும், M.பிர்நாஷ் R.சுஹைல் ரசீது இவர்களின் பாட்டனாருமாகிய ஆகிய A.முகமது அலி அவர்கள் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மவுத்.
 அன்னாரின் ஜனாஸா இன்று மாலை  5 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்

Thursday, 27 November 2025

திருவாரூர் மௌத் அறிவிப்பு

 புள்ளி தெரு அப்துல் காதர் மகன் கலிக்குல் ஜமான் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

Monday, 17 November 2025

தமுமுக மமக திருவாரூர் நகர புதிய நிர்வாக குழு

 

நவம்பர் 16.2025


 திருவாரூர் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம், கொடிக்கால்பாளையம் சூஃபி மன்ஜிலில் மாவட்ட தலைவர் முஜிபுர்ரஹ்மான் தலைமையில், துணை தலைவர் ஷாஹுல் ஹமீது மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் அடியற்கை நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடக்கமாக ரஃபி அவர்கள் கிராத் (குர் ஆன் வசனம்) ஓதினார். பொறுப்புக்குழு தலைவர் க. முஹம்மது ரஸ்வி வரவேற்புரையாற்றினார். மாநில பிரதிநிதி வெங்கலம். ஜஃபருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றியப்பின் நகர கீழ்காணும் நகர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


*தமுமுக-மமக நகர தலைவர் : J. முஹம்மது ஜான்

தமுமுக நகர செயலாளர்: முஹம்மது இஸ்மாயில்

மமக நகர செயலாளர்:

A. பாஷா

தமுமுக-மமக நகர பொருலாளர்:

H. முஹம்மது ஹாரிஸ். 


துணை தலைவர்: க. முஹம்மது ரஸ்வி ஜமான்

தமுமுக துணை செயலாளர்கள்:

1) பகுருதீன்

2) சதாம் ஹுசைன்

3) A சர்புதீன்

மமக துணை செயலாளர்கள்

1) P. முனவர் ஜமான்

2) M. நூருல் அல்ஜியாஸ்

3) M. முஹம்மது தம்பி


மேலும் செயற்குழு உறுப்பினர்களாக


1) V. S. N. M. முஹம்மது இஷாக்

2) V. P. M. A. முஹம்மது அபுபக்கர்

3) MA அப்துல் வஹாப்

4) S. பஷீர் அஹமது

5) SM சாகுல் ஹமீது (ராஜா  )

6) S செய்யது இப்ராஹிம் 

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவின் இறுதியாக A. பாஷா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு

Saturday, 8 November 2025

மௌத் அறிவிப்பு




08.11.2025


கொடிக்கால்பாளையம் மேலத்தெரு கணக்கு பிள்ளை வீட்டு மர்ஹூம் க.இ.முஹம்மது அப்துல்லா அவர்களின் மருமகனும்,

கருவப்பிள்ளை வீட்டு மர்ஹூம் M.முஹம்மது யூசுப் அவர்களின் சகலரும்,

க.இ.மு.மெய்தீன் அப்துல் காதர் அவர்களின் மச்சானும்,

 அடியக்கமங்கலம் மர்ஹூம் V.N அப்துல் ஹமீது அவர்களின் மகனாரும்,

புலிவலம் J.முஹம்மது நஜிருதீன் அவர்களின் மாமனாரும் ,

 அடியக்கமங்கலம் A.I.சேக் தாவுத் அவர்களின் தகப்பனாருமான *சேத்தான் என்கிற A.H.இஃப்திகாருதீன்* அவர்கள் அடியக்கமங்கலம் பிஸ்மில்லா நகர் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.