Thursday 20 June 2019

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது - பிரதீப் ஜான்

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் பருவ மழை தான், இந்தியாவின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 

கேரளாவில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கி விடுவது வழக்கம். ஆனால், ஜூன் 8ம் தேதி தான் பருவமழை துவங்கியது. இதற்கு 'வாயு' புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை 'வாயு' புயல் எடுத்துச் சென்றதால், பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் தாக்கம் வருகின்ற நாட்களில் குறைந்து காணப்படும் என கூறினார்.


No comments:

Post a Comment